சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் 86-வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் 86-வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக் கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது 789 மாணவ, மாணவிகளுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
இதில் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்ற 38 மாணவ, மாணவிகளுக்கு, பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்கப் பதக்கம், ரொக்கப் பரிசு உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.
மேலும், தொலைதூரக் கல்வி மையம் உள்ளிட்டவற்றின் மூலம் பயின்ற 35 ஆயிரத்து 593 பேருக்கு தபால் மூலம் பட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பதிவாளர் எம்.பிரகாஷ், சிண்டிகேட் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.