காலத்தால் அழியாத கவிதைகள் தந்த மகா கவிஞர் கண்ணதாசன் - சிறப்பு கட்டுரை!
Apr 29, 2026, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலத்தால் அழியாத கவிதைகள் தந்த மகா கவிஞர் கண்ணதாசன் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்பட பாடல்கள் மூலம் கோடானு கோடி இதயத்தைக் கவர்ந்த மகா கவிஞர் கண்ணதாசனின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப் படுகிறது. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ,எந்த நிலையிலும் தமக்க மரணமில்லை என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு கூடல்பட்டி என்னும் சிற்றூரில், சாத்தப்பன் விசாலாட்சி தம்பதியருக்கு 1927ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். சிறுவயதிலேயே கலையார்வம் இருந்த காரணத்தால், எட்டாம் வகுப்போடு, படிப்பை விட்டு விட்டு 1943ம் ஆண்டு சென்னை வந்தார்.

கண்ணன் மீதான தீவிர பக்தியால், முத்தையா என்ற தனது இயற்பெயரை
கண்ணதாசன் என்று வைத்துக்கொண்டவர், ஆரம்ப காலங்களில், திருமகள்,சண்டமாருதம் ,திரை ஒளி,தென்றல்,முல்லை,கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக செம்மையாக பணியாற்றி இருக்கிறார்.

சண்டமாருதம் இதழ் நிறுத்தப்பட்டதால் ,சேலம் மாடர்ன் தியேட்டரில் கதை இலாகாவில் பணியில் சேர்ந்தார் கண்ணதாசன்.

பிறகு, ஜூபிடர் நிறுவன தயாரிப்பில் வெளியான கள்வனின் காதலி திரைப்படத்தில், கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என, முதல் திரைப்படப் பாடலிலேயே தன்னம்பிக்கை தந்திருந்தார்.

அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகள் , தமிழ் திரைத் துறையை முழுமையாக தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தார். மேலும் தமிழ் உள்ளங்களை தன் திரைத் தமிழால் கட்டி வைத்திருந்தார்.

இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள்,இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட எல்லோரும் கண்ணதாசனின் பாடல்கள் தங்கள் படங்களில் இடம் பெறுவதைப் பெருமையாக கருதினார்கள்.

தொடக்கத்தில், திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கண்ணதாசன், பிறகு இந்து மதத்தில் பற்றுடையவரானார். 10 தொகுதிகளாக அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் நூல், இன்றும் உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

எல்லா மதத்தையும் மதிக்கும் இந்துமதம் போலவே, கவிஞர் கண்ணதாசனும் , இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை மகா காவியமாக படைத்து தந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

சேரமான் காதலி என்னும் புதினத்துக்காக இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசன், தலைசிறந்த பாடலாசிரியர் ஆவார்.

கிட்டத்தட்ட7500க்கும் மேற்பட்ட தனிக்கவிதைகள், 5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள், நாவல்கள்,சிறுகதைகள்,சிற்றிலக்கியங்கள், நாடகங்கள்,மொழிபெயர்ப்பு,காவியங்கள்,உரைநூல்கள் என ஊற்றுப் பெருக்காக இலக்கியங்களின் அனைத்து வடிவங்களிலும் தன் ஆளுமையை செலுத்தியவர் கண்ணதாசன்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக 1981ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணதாசன், அதே ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி காலமானார்.

ஆறுதலாக, தாலாட்டாக, உத்வேகமாக, தன்னம்பிக்கையாக,காதலாக, கண்ணீராக, சோகமாக , சந்தோஷமாக என எல்லா உணர்வுகளுக்கும் கண்ணதாசனின் பாடல்களே துணையாக இன்றும் இருக்கின்றன.

காட்டுக்கு ராஜா சிங்கம், கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று போற்றப்படும் கண்ணதாசனின் நினைவு நாளில், மகா கவிஞனின் தமிழைப் போற்றுவோம்.

Tags: 43rd death anniversarypoet Kannadasantribute kannadasan
ShareTweetSendShare
Previous Post

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies