காலத்தால் அழியாத கவிதைகள் தந்த மகா கவிஞர் கண்ணதாசன் - சிறப்பு கட்டுரை!
Jun 15, 2026, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலத்தால் அழியாத கவிதைகள் தந்த மகா கவிஞர் கண்ணதாசன் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திரைப்பட பாடல்கள் மூலம் கோடானு கோடி இதயத்தைக் கவர்ந்த மகா கவிஞர் கண்ணதாசனின் 43 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப் படுகிறது. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை ,எந்த நிலையிலும் தமக்க மரணமில்லை என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு கூடல்பட்டி என்னும் சிற்றூரில், சாத்தப்பன் விசாலாட்சி தம்பதியருக்கு 1927ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, எட்டாவது மகனாக பிறந்தார் கண்ணதாசன். சிறுவயதிலேயே கலையார்வம் இருந்த காரணத்தால், எட்டாம் வகுப்போடு, படிப்பை விட்டு விட்டு 1943ம் ஆண்டு சென்னை வந்தார்.

கண்ணன் மீதான தீவிர பக்தியால், முத்தையா என்ற தனது இயற்பெயரை
கண்ணதாசன் என்று வைத்துக்கொண்டவர், ஆரம்ப காலங்களில், திருமகள்,சண்டமாருதம் ,திரை ஒளி,தென்றல்,முல்லை,கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக செம்மையாக பணியாற்றி இருக்கிறார்.

சண்டமாருதம் இதழ் நிறுத்தப்பட்டதால் ,சேலம் மாடர்ன் தியேட்டரில் கதை இலாகாவில் பணியில் சேர்ந்தார் கண்ணதாசன்.

பிறகு, ஜூபிடர் நிறுவன தயாரிப்பில் வெளியான கள்வனின் காதலி திரைப்படத்தில், கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே என, முதல் திரைப்படப் பாடலிலேயே தன்னம்பிக்கை தந்திருந்தார்.

அதன் பிறகு சுமார் 40 ஆண்டுகள் , தமிழ் திரைத் துறையை முழுமையாக தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தார். மேலும் தமிழ் உள்ளங்களை தன் திரைத் தமிழால் கட்டி வைத்திருந்தார்.

இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள்,இயக்குனர், தயாரிப்பாளர் உட்பட எல்லோரும் கண்ணதாசனின் பாடல்கள் தங்கள் படங்களில் இடம் பெறுவதைப் பெருமையாக கருதினார்கள்.

தொடக்கத்தில், திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த கண்ணதாசன், பிறகு இந்து மதத்தில் பற்றுடையவரானார். 10 தொகுதிகளாக அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்துமதம் நூல், இன்றும் உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

எல்லா மதத்தையும் மதிக்கும் இந்துமதம் போலவே, கவிஞர் கண்ணதாசனும் , இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை மகா காவியமாக படைத்து தந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

சேரமான் காதலி என்னும் புதினத்துக்காக இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் கண்ணதாசன், தலைசிறந்த பாடலாசிரியர் ஆவார்.

கிட்டத்தட்ட7500க்கும் மேற்பட்ட தனிக்கவிதைகள், 5000க்கும் மேற்பட்ட திரைப்பாடல்கள், நாவல்கள்,சிறுகதைகள்,சிற்றிலக்கியங்கள், நாடகங்கள்,மொழிபெயர்ப்பு,காவியங்கள்,உரைநூல்கள் என ஊற்றுப் பெருக்காக இலக்கியங்களின் அனைத்து வடிவங்களிலும் தன் ஆளுமையை செலுத்தியவர் கண்ணதாசன்.

உடல்நிலை பாதிப்பு காரணமாக 1981ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணதாசன், அதே ஆண்டு, அக்டோபர் 17ம் தேதி காலமானார்.

ஆறுதலாக, தாலாட்டாக, உத்வேகமாக, தன்னம்பிக்கையாக,காதலாக, கண்ணீராக, சோகமாக , சந்தோஷமாக என எல்லா உணர்வுகளுக்கும் கண்ணதாசனின் பாடல்களே துணையாக இன்றும் இருக்கின்றன.

காட்டுக்கு ராஜா சிங்கம், கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று போற்றப்படும் கண்ணதாசனின் நினைவு நாளில், மகா கவிஞனின் தமிழைப் போற்றுவோம்.

Tags: 43rd death anniversarypoet Kannadasantribute kannadasan
ShareTweetSendShare
Previous Post

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

திருச்செந்தூரில் 50 அடி தூரம் உள்வாங்கிய கடல்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies