திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோயிலில், 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பெண் தர்மகர்த்தா வளர்மதி பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் வளாகத்துக்குள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை தீவிரமாக பார்ப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தர்மகர்த்தா உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். வரும் 29ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.