முன்னாள் RAW அதிகாரியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த அமெரிக்கா - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் RAW அதிகாரியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த அமெரிக்கா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இந்தியாவின் முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், விகாஷ் யாதவைத் தேடப் படும் குற்றவாளியாக அமெரிக்க FBI அறிவித்துள்ளது. யார் இந்த விகாஷ் யாதவ் ? விகாஷ் யாதவ் மீது அமெரிக்க சொல்லும் குற்றச் சாட்டுக்கள் என்னென்ன ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே காலிஸ்தான் தீவிரவாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே இந்தியாவில், காலிஸ்தான் சார்புடைய இயக்கங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், அந்நிய நாடுகளில் இருந்த படி, காலிஸ்தான் இயக்கத்தினர், இந்தியாவுக்கு எதிராக வெளிப் படையாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கனடாவிலும், அமெரிக்காவிலும் காலிஸ்தான் இயக்கத்தினர் சுதந்திரமாக இயங்கி வந்தனர்.

அப்படி ஒருவர் தான் அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னூன். நியூயார்க்கை சேர்ந்த வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னூன் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் ஆலோசகராக இருக்கிறார். இந்தியாவில் வன்முறைக்கு நிதியுதவி செய்ததற்காகவும், காலிஸ்தான் பிரிவினை உணர்வை தூண்டியதற்காகவும், குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வைத்து, குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதி நடந்தது. இந்தப் படுகொலைச் சதியில் இந்திய ரா அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியாவிடம் அமெரிக்க தகவல் தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக மறுத்தது.

இதைத் தொடர்ந்து, மன்ஹட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், விகாஷ் யாதவ் இந்திய ரா அதிகாரி என்றும் நிகில் குப்தா என்பவருடன் சேர்ந்து பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் விகாஷ் யாதவ், பன்னூனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும் , நிகில் குப்தாவை வேலைக்கு அமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குர்பத் வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய இருவரும் அமெரிக்காவில் உள்ள கொலையாளி ஒருவரை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தருவதாக தெரிவித்துள்ளனர் என்றும், அதற்கு முன் பணமாக 15000 அமெரிக்க டாலரையும் தந்துள்ளனர் என்றும், அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது. மேலும், ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் யாதவ் பெயர் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளது.

FBIயின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு எதிராக பழிவாங்கும் வன்முறை சார்ந்த முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட விகாஷ் யாதவ் ,இந்திய அரசின் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும்,மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அமெரிக்கா பகிர்ந்து கொண்ட தகவல்களை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழலில், விகாஷ் யாதவ்வுக்கு, வாடகைக்கு கொலை செய்ய சதி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மற்றும் பணமோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Tags: Vikash YadavKhalistan terrorist Gurpadwant Singh BannuUS FBIKhalistan extremistsFormer Indian RAW officer
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Next Post

தீட்சிதர்கள் பணி நீக்கம் தொடர்பான வழக்கு – அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies