முன்னாள் RAW அதிகாரியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த அமெரிக்கா - சிறப்பு கட்டுரை!
Sep 13, 2026, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் RAW அதிகாரியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த அமெரிக்கா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 19, 2024, 01:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலிஸ்தான் தீவிரவாதி, குர்பத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக இந்தியாவின் முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், விகாஷ் யாதவைத் தேடப் படும் குற்றவாளியாக அமெரிக்க FBI அறிவித்துள்ளது. யார் இந்த விகாஷ் யாதவ் ? விகாஷ் யாதவ் மீது அமெரிக்க சொல்லும் குற்றச் சாட்டுக்கள் என்னென்ன ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஞ்சாபை தனியாக பிரித்து, காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே காலிஸ்தான் தீவிரவாதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே இந்தியாவில், காலிஸ்தான் சார்புடைய இயக்கங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆனாலும், அந்நிய நாடுகளில் இருந்த படி, காலிஸ்தான் இயக்கத்தினர், இந்தியாவுக்கு எதிராக வெளிப் படையாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கனடாவிலும், அமெரிக்காவிலும் காலிஸ்தான் இயக்கத்தினர் சுதந்திரமாக இயங்கி வந்தனர்.

அப்படி ஒருவர் தான் அமெரிக்காவிலும், கனடாவிலும் குடியுரிமை பெற்ற குர்பத்வந்த் சிங் பன்னூன். நியூயார்க்கை சேர்ந்த வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் பன்னூன் காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் ஆலோசகராக இருக்கிறார். இந்தியாவில் வன்முறைக்கு நிதியுதவி செய்ததற்காகவும், காலிஸ்தான் பிரிவினை உணர்வை தூண்டியதற்காகவும், குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் வைத்து, குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதி நடந்தது. இந்தப் படுகொலைச் சதியில் இந்திய ரா அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக இந்தியாவிடம் அமெரிக்க தகவல் தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக மறுத்தது.

இதைத் தொடர்ந்து, மன்ஹட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், விகாஷ் யாதவ் இந்திய ரா அதிகாரி என்றும் நிகில் குப்தா என்பவருடன் சேர்ந்து பன்னுனைக் கொல்ல சதி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் விகாஷ் யாதவ், பன்னூனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும் , நிகில் குப்தாவை வேலைக்கு அமர்த்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம், செக் குடியரசில் கைது செய்யப்பட்ட நிகில் குப்தா அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குர்பத் வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய இருவரும் அமெரிக்காவில் உள்ள கொலையாளி ஒருவரை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தருவதாக தெரிவித்துள்ளனர் என்றும், அதற்கு முன் பணமாக 15000 அமெரிக்க டாலரையும் தந்துள்ளனர் என்றும், அமெரிக்க நீதித்துறை கூறியுள்ளது. மேலும், ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் யாதவ் பெயர் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளது.

FBIயின் இயக்குனர் கிறிஸ்டோபர் ரே வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகளைப் பயன்படுத்துவதற்காக அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு எதிராக பழிவாங்கும் வன்முறை சார்ந்த முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்ட விகாஷ் யாதவ் ,இந்திய அரசின் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கும் இந்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு மறுத்துள்ளது. மேலும்,மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அமெரிக்கா பகிர்ந்து கொண்ட தகவல்களை ஆராய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த சூழலில், விகாஷ் யாதவ்வுக்கு, வாடகைக்கு கொலை செய்ய சதி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் மற்றும் பணமோசடி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Tags: Former Indian RAW officerVikash YadavKhalistan terrorist Gurpadwant Singh BannuUS FBIKhalistan extremists
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Next Post

தீட்சிதர்கள் பணி நீக்கம் தொடர்பான வழக்கு – அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies