புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தவெக அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். அதன்படி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்குவாரிகளை ஆய்வு செய்ய அமைச்சர் பிரபு உத்தரவிட்ட நிலையில், விதிமுறைகள் மீறி செயல்படும் குவாரிகள் மூடப்படுகின்றன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 8க்கும் மேற்பட்ட குவாரிகள் அரசு அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, முதல்கட்டமாக 8 குவாரிகளை மூட சுங்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், விதிகளை மீறி செயல்பட்ட குவாரிகள் மீது அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
















