பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி என அனைத்திலும் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது கார்கில் வெற்றி தினத்தை குறிப்பிட்டு பேசிய அவர், இந்த நாள் நம்மை பெருமிதமடைய செய்வதாகவும்
வீர நெஞ்சம் கொண்ட இந்திய ராணுவ வீரர்கள் அனைத்தையும் தியாகம் செய்தனர் எனவும் புகழாரம் சூட்டினார்.
பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும் இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருவதாக கூறிய பிரதமர் மோடி,
இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல் நாட்டின் ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள செய்தது எனவும்
விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் காதி பொருட்களின் விற்பனை 6 மடங்கு அதிகரித்து 8 ஆயிரம் கோடி ரூபாயாக விற்பனை உயர்ந்துள்ளது எனவும்
வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினை பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்குமாறும் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்/
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துவிற்கும் லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி் பெற்ற இந்திய மகளிர் அணிக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
















