வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு - சிறப்பு தொகுப்பு!
Sep 9, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 26, 2026, 11:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா வேண்டுமென்றே வெள்ளத்தை ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைகளுக்கு முரணானவை என்று இந்தியா மறுத்துள்ளது. தீவிர பருவமழையின் நேரடி விளைவாகவே செனாப் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாகவும் இந்தியா விளக்கமளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

தங்கள் நாட்டில் எது நடந்தாலும் எதற்கெடுத்தாலும் இந்தியாவை நோக்கி கை நீட்டுவது பாகிஸ்தானின் வழக்கமாகவே உள்ளது.

தற்போது பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கிகுக்கு இந்தியா திட்டமிட்டு நீரைத் திறந்து விட்டதே காரணம் என்ற குற்றச் சாட்டை பாகிஸ்தான் வைத்துள்ளது.

வெள்ளப்பெருக்கிற்கு புது தில்லியே காரணம் என பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகளை இந்தியா மறுத்துள்ளது.

பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்று மறுத்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், செனாப் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததற்கு பருவமழைக் காலத்தில் பெய்த கனமழையே காரணம் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

கடந்த ஜூலை 20ம் தேதி முதல் 23 தேதி வரை ஜம்மு மற்றும் அதை ஒட்டிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தீவிர பருவமழையின் நேரடி விளைவாகவே செனாப் நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த ஜூலை 22 ம் தேதி பாகிஸ்தானின் வானிலை ஆய்வு மையம் கனமழை மற்றும் வெள்ள அபாயம் குறித்தும் முனனெச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆதாரத்துடன் பாகிஸ்தானின் குற்றசாட்டுகளை மறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் வெள்ளம் குறித்த முன் எச்சரிக்கைகளைப் பாகிஸ்தானுக்கு அனுப்பத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார்.

அதே நேரம் மனிதாபிமான அடிப்படையில் முக்கியத் தரவுகளைப் பாகிஸ்தானுடன் பகிர்வதில் இந்தியா உறுதியாக உள்ளதாக கூறியுள்ள ஜெயஸ்வால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக ஆசியான் மன்றத்தில் பாகிஸ்தான் தெரிவித்த கருத்துக்களுக்கும் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் நிரந்தரமாக நிறுத்தாத வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எந்த வகையிலும் சீனாவின் இறையாண்மையை இந்தியா மீறாத நிலையில் 1963ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளைச் சட்டவிரோதமாக சீனா ஆக்கிரமித்துள்ளது என்று குறிப்பிட்ட ஜெயஸ்வால் அப்பகுதிகளில் சீனாவின் உள்கட்டமைப்புத் திட்டங்ககளை இந்தியா தொடர்ந்து எதிர்க்கும் என்றும் கூறியுள்ளார்,

Tags: Indiapakistanwater flowRandhir JaiswalChenab river.indus water treadyindus water flow stopped
Share
Tweet
SendShare
Previous Post

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

Next Post

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

Related News

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம் ; 3 அமைச்சர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies