கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி சென்னையில் உள்ள போர்நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவத்தின் தக்ஷிண பாரத பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் கார்கில் அருகே உள்ள டைகர்மலையை ஆக்கிரமித்த பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் போரிட்டது. மே மாதம் தொடங்கிய போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்று ஜூலை 26ஆம் தேதி கார்கில் பகுதியில் இந்தியக் கொடியை நிலைநாட்டியது.
இந்நிலையில், 27வது கார்கில் வெற்றி தினத்தையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில், இந்திய ராணுவத்தின் தக்ஷிண பாரத பகுதியின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மற்றும் உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, முப்படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், இந்திய கடலோர காவல்படையின் மூத்த அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர். இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சியை பார்க்க பார்வையாளராக அனுமதிக்கப்பட்டனர்.
















