அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் - சிறப்பு தொகுப்பு!
Jul 26, 2026, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 8, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தை மீறியுள்ள ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் இந்த தாக்குதல்கள் அடுத்த 7 நாட்களுக்குத் தொடரும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரானின் பல்வேறு நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகிலும் இஸ்பஹான் மற்றும் தப்ரீஸ் நகரங்களிலும் தீவிர தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது தாக்குதல்களைத் தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அது இஸ்ரேலின் சொந்த முடிவு என்றும் அதன்பிறகு அமெரிக்காவிடமிருந்து எதையும் இஸ்ரேல் எதிர்பார்க்க முடியாது என்றும் அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான ஒப்பந்தத்தை எட்டுவதில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அதை எதிர் தாக்குதல் நடத்தி கெடுக்க வேண்டாம் என்றும் இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை முதலில் நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பின்னர் ஓரளவுக்கு ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் தொடர்பான முடிவுகளை எடுப்பவனாக தானே இருப்பதால் எல்லா முடிவுகளையும் தானே எடுப்பதாகவும், நெதன்யாகு எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், பேச்சுவார்த்தைகளைத் தொடரும் தமது விருப்பத்தைப் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத தாக்குதல்களாகவே உள்ளன என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத பட்சத்தில் அந்நாடு மீதான பொருளாதாரத் தடை தொடரும் என்றும், தரைப்படை ராணுவத் தாக்குதல்களையும் அமெரிக்கா முன்னெடுக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

என்றாலும் கள எதார்த்தம் வேறுவிதமாக உள்ளது. ஈரானுக்கு எதிராக “அளவுக்கு மீறிய சக்தியைப் பயன்படுத்துவோம்” என்று ஒரு காலத்தில் மிரட்டிய அதே டிரம்ப் தான் இப்போது, மத்திய கிழக்கில் தான் ஏற்படுத்திய குழப்பத்தைச் சரிசெய்ய பாகிஸ்தானை அமைதியாகப் பயன்படுத்தி வருகிறார்.

போருக்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி 21ம் தேதியே ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தோல்வியில் தான் முடியும் என்றும், அது அமெரிக்காவை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தும் என்றும் சவுதி அரேபியா எச்சரித்திருந்தது.

அப்போது சவூதியின் குரலை ஆணவத்தோடு நிராகரித்த ட்ரம்ப், இப்போது பாகிஸ்தான் வழியாக போரில் இருந்து வெளியேற முயன்றும் திணறிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு மசோதாவின் 224 பிரிவு, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இராணுவ அமைப்புகளின் முக்கிய பகுதிகளை ஒன்றிணைத்துள்ளது.

இதன் மூலம் கூட்டு ஆயுத உற்பத்தி, பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், சைபர் மற்றும் தரவுகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க் இஸ்ரேலின் உளவுதுறையினர் வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் மீது உளவு பார்ப்பதற்காக, இஸ்ரேலை ஒரு “முக்கியமான” உளவு சாதனமாக பென்டகன் பயன்படுத்தி வருகிறது.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு கூட்டாண்மை என்று சொன்னாலும் உண்மையில் இது இஸ்ரேலின் கைப்பற்றல் என்று கூறப்படுகிறது.

சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்காவின் அரசியல் அமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகவும் இனி ஈரான் போருக்கான தீர்வு அமெரிக்காவிடமும் இல்லை; இஸ்ரேலிடமும் இல்லை. மாறாக அது போரில் பங்கேற்காத மத்திய கிழக்கு நாடுகளிடம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags: Iran-US wariran war newsus iran war liveiran war updateiran war latestisrael us iran waramerica vs iran warIsraelTrumpiran warStrait of Hormuz
ShareTweetSendShare
Previous Post

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

Next Post

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

Related News

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

கார்கில் போர் வெற்றி தினம் – சென்னை போர்நினைவுச் சின்னத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ஶ்ரீஹரி மரியாதை!

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies