கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயிலில் கடந்த 15ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது ஒரு உண்டியலை திட்டமிட்டு திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோயில் ஊழியர்களான பாலசுப்ரமணியன், சரவணன், பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் மற்றும் சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார், செயல் அலுவலர் குமார் மற்றும் உதவி ஆணையர் உஷா நந்தினி ஆகிய 8 பேரை சஸ்பெண்ட் செய்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கோயில் உண்டியல் திருட்டு வழக்கு தொடர்பாக 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















