சர்ச்சையில் சிக்காமல் இருப்பதற்காக சமுதாய நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்க வேண்டாம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வுக்கு செல்லும் இடங்களில் செய்தியாளர்களை சந்திக்கும்போது, அமைச்சர்கள் சில விஷயங்களை தவறாக கூறுவது சர்ச்சையாகி வருகிறது.
போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் சமீபத்தில் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், அமைச்சர்களை அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் தலைவர்கள் சந்தித்து, சமுதாய நிகழ்ச்சிகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய், அமைச்சர்கள் யாரும் தற்போதைக்கு சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் தாக்கல், மானிய கோரிக்கை மீதான விவாதம் மற்றும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடியும் வரை, சர்ச்சையில் சிக்காமல் இருக்குமாறு அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
















