பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்டவர்கள் மீது புகார் அளித்தும், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜயை மிரட்டும் தொனியில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏவை அதிகாலையில் காவல்துறை கைது செய்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
ஆனால் பிரதமர் விவகாரத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
















