திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 241 முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது 1,020 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதனடிப்படையில், சென்னை, திருச்சி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கே.என்.நேரு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு பொருட்கள் கைப்பற்றபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
















