சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் - சிறப்பு தொகுப்பு!
Sep 5, 2026, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 5, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீன எல்லையில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பாறை வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, அங்குள்ள பேரிடர் Early-warning system என்ற முன்னெச்சரிக்கை அமைப்பை அவசரமாக மீண்டும் சீரமைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி இமயமலைப் பகுதியில் நிகழ்ந்த பனிப்பாறை சரிவினால் நேபாள சீன எல்லையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி நேபாளம் மற்றும் சீனாவில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

இந்தச் சூழலில், பாதிப்புகள் தொடர்வதைத் தடுக்கவும், நதியோரங்களில் குடியிருக்கும் மக்களைப் பாதுகாக்கவும் நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீன எல்லையையொட்டிய நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள ‘திமுரே’ (Timure) பகுதியில் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.

நில அதிர்வுகளை முன்கூட்டியே கண்டறியும் சென்சார்கள் மற்றும் நிலச்சரிவுகளைக் கண்காணிக்க ரிமோட் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.

இயற்கைப் பேரிடர் காலங்களில் மொபைல் நெட்வொர்க்குகள் செயலிழந்தாலும், தடையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக விசாட் (VSAT) செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வகையில் நெட்வொர்க் சீரமைக்கப்படவுள்ளன.

தற்போதைய பெருவெள்ளத்திற்குப் பின் மலைப்பகுதிகளின் நிலப்பரப்பு சீரற்று காணப்படுவதால், மேலும் பல கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுனர்களும் அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

புதிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு செயல்பட்டால், அடுத்தடுத்து நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் போது, ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல சில நிமிடங்களாவது அவகாசம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக லெண்டே மற்றும் போட் கோசி நதிப் பகுதிகளில் ஏற்பட்ட ஒரு பெரிய பனிப்பாறை சரிவினால், சேறு, நீர் மற்றும் இடிபாடுகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து, நான்கு நீரியல் கண்காணிப்பு நிலையங்கள் அழிக்கப்பட்டதால், அவை சரியான நேரத்தில் முன் எச்சரிக்கைகளை வழங்க முடியாமல் போயின என்று கூறப் படுகிறது.

திடீர் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட வெள்ளத்தின் வேகம் மற்றும் அளவு குறித்து போதுமான எச்சரிக்கைகளை வழங்க முடியாத அளவுக்கு ஏற்கனவே இருந்த கண்காணிப்பு நெட்வொர்க் செயலிழந்ததால் இறுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

தொடக்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட 38 நிமிடங்களுக்குப் பிறகே இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக அமைக்கப் பட்டுள்ள புதிய கண்காணிப்பு நெட்வொர்க் பெரும்பாலும் மழையினால் ஏற்படும் நதி மட்டங்களின் படிப்படியான உயர்வுகளைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

முக்கியமாக வழக்கமான ஆற்று மட்ட அளவீடுகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, பல்வேறு வகையான அபாயங்களைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு கண்காணிப்பு நெட்வொர்க்கை நேபாள அரசு உருவாக்கியுள்ளது.

இந்தப் பேரழிவு, நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே வலுவான நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கான கோரிக்கைகளையும் புதுப்பித்துள்ளது.

பல பனிப்பாறை அபாயங்கள் திபெத்தின் உயரமான பகுதிகளில் உருவாவதால் நேபாளத்தில் இமய மலை அடிவாரத்தில் உள்ள மக்களுக்குப் பனிப்பாறைகளின் நகர்வுகள், நீரோட்டத்தின் மேலுள்ள நீர் மட்டங்கள் மற்றும் அபாயகரமான தடுப்பு ஏரிகள் பற்றிய முன்னெச்சரிக்கை தகவல்கள் மிகவும் முக்கியமானதாகின்றன.

நடந்து முடிந்த பேரழிவைத் தொடர்ந்து செயற்கைக்கோள் படங்கள், நீரியல் தகவல்கள் மற்றும் நீரோட்டத்தின் மேலுள்ள தடுப்பு ஏரிகள் குறித்த சமீபத்திய தகவல்களை நேபாளத்துடன் சீனா பகிர்ந்துள்ளது.

ஒரு பெரும் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பிறகு கண்டறியப்பட்ட தகவல்களைப் பகிர்வது மட்டும் போதுமானதாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Chinese border.nepal flood alertnepal floodrasuwa nepal floodnepal floodsearly-warning systemnepal flood newsnepal china bordernepal flood 2026nepal flood livenepal flood rainflood in nepalnepal flash floodnepal flood videonepal flood today
Share
Tweet
SendShare
Previous Post

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Related News

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி சேகரிப்பு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies