திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணிக்கு சொந்தமான இரண்டு இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் ஒரு பகுதியாக, கைகாட்டிப்புதூரில் உள்ள அவரது நிறுவன அலுவலகம் மற்றும் காமராஜ் நகரில் உள்ள வீட்டில், இன்று காலை 8 மணி முதல் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது.
மேலும், திருப்பூர் சரக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.என். நேருவுக்கு வேலுமணி மிகவும் நெருக்கமானவர் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக, இதே இடங்களில் கடந்த 2024-ம் ஆண்டு வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
















