டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் கடைகளை மூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 68 டாஸ்மாக் கடைகளை மூடி 300-க்கும் மேற்பட்டோர் மதுபான மொத்த விற்பனை கிடங்கு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ராணிப்பேட்டை டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள 76 டாஸ்மாக் கடைகளையும் மூடி பணியாளர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
















