பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு இடங்களில் ராணுவப் பாதுகாப்புப் படை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஹஜிகா பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் தொலைவில் இருந்து இயக்கப்பட்டு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. சூராப் பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ததில் ராணுவ வாகனம் சேதம் அடைந்தது.
இரு வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டு நிலையில், இந்த இரண்டு தாக்குதல்களுக்கும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) பொறுப்பேற்றுள்ளது.
















