திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கைது செய்யப்பட்ட 23 வங்க தேசத்தினருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வேலம்பாளையம் பகுதியில் சோதனை நடத்திய போலீசார், ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த சலீம், ரிபோன், முகமது மிலோன் உள்ளிட்ட 23 பேரை கைது செய்தனர்.
அவர்களை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, 23 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
















