உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஏற்பட்டுள்ள தீவிர வெள்ளப்பெருக்கால், கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவை நோக்கி வேகமாக உயர்ந்து வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ராஜாபூர், சோட்டா பகடா, பேலி, தாராகஞ்ச் உள்ளிட்ட பகுதிகளின் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மாடிகளிலும், பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதனிடையே மாநிலம் வாரணாசியில் வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, நிவாரண முகாம்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு குறித்து கேட்டறிந்தார்.
















