சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதுமாக தடை விதிக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை விதித்ததை எதிர்த்து மீனவர்கள் நலச் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சுருக்குமடி வலை தொடர்பான விவகாரத்தில் முழுவதுமாக தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு அனுமதியை வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் 2020ஆம் ஆண்டு விதிமுறைகள் பிரிவு 5, 6 ஆகியவற்றில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ள உச்சநீதிமன்றம், நாட்டுப்படகு மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் வழக்காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
















