ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த வளாகம் சென்னையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த புதிய வளாகம் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.
தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்றுவரும் வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு ஏற்ப நவீன நிர்வாக வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கும் வகையில் புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
















