காவிரி போன்ற ஜீவாதார பிரச்னைகள் குறித்து சட்டமன்றத்தில் முறையான விவாதங்கள் நடத்தப்படுவதில்லை என்றும், தனிப்பட்ட விமர்சனங்களே தினசரி நடப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜக சேவை உறுதிமொழி இயக்கம் மற்றும் மாநில பயிலரங்கம் நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த் மேனன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்திருந்தாலும், அது கடைமடை வரை செல்வது சந்தேகம் தான் என்று தெரிவித்தார்.
















