அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களது பெற்றோரின் குடியுரிமை சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் விசா விதிகளில் பல கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்துவதற்காக புதிய திட்டம் ஒன்றை டிரம்ப் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வாங்கும்போது பெற்றோர் தங்களது அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 14-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிடைக்கும் அடிப்படை உரிமையை பறிக்கும் முயற்சி இது என பல்வேறு தரப்பினரும் விமர்சித்துள்ளனர்.
















