சென்னையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூர், மதுரவாயல், வேளச்சேரி, மாதவரம், சேத்துப்பட்டு, பெரம்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பல்வேறு குழுக்களாக பிரிந்த அதிகாரிகள் 20-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு மையங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐஸ்வர்யா, ஏ.ஆர்.சி., பிரசாந்த் உள்ளிட்ட கருத்தரித்தல் மையங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதில், சிகிச்சை பெறுவோருக்கு முறையாக ரசீது வழங்கப்படுகிறதா, வசூலிக்கப்படும் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
















