திமுக ஆட்சியில் டாப்கியரில் சென்ற தமிழகம், தவெக ஆட்சியில் ரிவெர்ஸ் கியரில் செல்கிறது என சட்டப்பேரவை திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
பேரவையில் பேசிய அவர், தவெக ஆட்சியமைந்த பின்னர் பெயர் மாற்ற அறிவிப்பு மட்டுமே வருகிறதே தவிர திட்டம் இல்லை என தெரிவித்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் என்னும் திட்டத்திற்கு பதிலாக தாய்மாமன் காது குத்தும் திட்டம் என வைத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
திமுக ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிட்டதற்கு நன்றி என்றும், தமிழகத்தின் நலனுக்காக கொண்டு வந்த திட்டங்களை எதற்காக ரத்து செய்கிறீர்கள்? என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
இன்றைக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இல்லை, குற்றங்களும் குறையவில்லை – உதயநிதி ஸ்டாலின் என்றும், கறிக்கடையை விட தமிழகத்தில் தினசரி வெட்டு குத்து நடக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
















