சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என்ற தனித் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றும், தமிழை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாஜக, விசிக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் கொண்டு வந்த தனி தீர்மானம் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவித்தார்.
















