எல்லை பாதுகாப்பு, இயற்கை பேரிடர் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட EOS-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, GSLV F17 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிகாலை 2.55 மணிக்கு ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் சுமார் 18 நிமிடங்கள் 34 வினாடிகள் பயணித்து, புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் கரரொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
















