இது போருக்கான காலம் அல்ல என்ற இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு தெரிவித்தார்.
உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, “இது போருக்கான காலம் அல்ல; அமைதியே உடனடித் தேவை” என்ற இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு தெரிவித்தார்.
மேலும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா காட்டும் தீவிர ஆர்வத்திற்கும், அமைதி முயற்சிகளுக்கும் உக்ரைன் அரசு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
















