புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘கூட்டத்தில், அறந்தாங்கி தொகுதியில் தோல்வியை தழுவியது தொடர்பாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் திடீரென்று முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் எழுந்து ஆவேசமாக மேடை நோக்கி சென்று மேடையில் ஏறி மைக்கை பிடிங்கிக் கொண்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி 2026 திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதி அதை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன் தொடர்ந்து அறந்தாங்கி தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவது ஏன் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார் இதனால் மேடையில் இருப்பவர்களுக்கும் உதயம் சண்முகத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
ஒரு கட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரகுபதி அதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட அமைச்சராக உள்ள பர்வேஸ் வெற்றி பெற்றதற்கு காரணமே உன்னுடைய மகன்தான்
அவர்தான் பர்வேசை தெருத் தெருவாக அழைத்துச் சென்று பிரச்சாரம் செய்ததன் விளைவாகத்தான் அவர் வெற்றி பெற்றார் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதற்கு உங்களுடைய மகன்தான் காரணம் என் கூறியதால் மேடையிலேயே இருவருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
மேலும் கூட்டத்தில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது உடனடியாகஏ கே எஸ் விஜயன் எழுந்து சரமாரியாக நிர்வாகிகளை கண்டித்து பேசினார்
















