கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், தவெக அரசுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆளும் அரசின் நிர்வாக தோல்விக்கான மற்றுமொரு சான்று என சாடியுள்ளார். மேலும், “ரீல்ஸ்” மோகத்தில் ஊறித் திளைக்கும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் செயல்பாடுகளில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















