சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணாந்துறை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கண்ணன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சென்ற சாஸ்திரி நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
















