சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் அலிரேசா ஃபிரோஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
வேளச்சேரியில் குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் கடைசி மற்றும் 7-வது சுற்று நேற்று நடைபெற்றது. இதில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ் வீரர் அலிரேசா ஃபிரோஜா, 3.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்த இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பான இந்த ஆட்டம், 41-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதனால் இருவருக்கும் அரை புள்ளி வழங்கப்பட்டது. அதன்படி 4.5 புள்ளிகள் பெற்ற அலிரேசா ஃபிரோஜா, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டியில் பெரும் பின்னடவை சந்தித்த உலக சாம்பியன் குகேஷ், 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்..
















