முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவில்பட்டியில் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ மார்க்கண்டேயன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.
வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், சிறை சவுகரியமாக இருப்பதாகவும், எத்தனை நாள் உள்ளே இருக்கிறோமோ, அவ்வளவு வேகத்தில் ஆட்சிக்கு வருவோம் என போலீஸ் வாகனத்தில் இருந்தவாறு கூறினார்…
















