பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அட்டாரி-வாகா எல்லையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள மெய்ன் வாபஸ் ஆவுங்கா திரைப்படம் வரும் 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. ராணுவ பின்னணியை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் BSF வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அட்டாரி – வாகா எல்லையில் ஏ.ஆர்.ரகுமானின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆஸ்கர் விருது வென்ற ஜெய் ஹோ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் தனது குழுவினருடன் சேர்ந்து பாடினார்.
















