டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் மீண்டும் வன்முறையில் ஈடுபட்டதால் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது போராட்டக்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கற்களை வீசியும், தடிகளை கொண்டு தாக்கியும் வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான போலீசார் காயம் அடைந்தனர். கன்னாட் பிளேஸ் உதவி ஆணையர் விவேக் பகத், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் காவலர் ஒருவரை 200க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் விரட்டி விரட்டி கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
டெல்லி போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களிடம் கரப்பான் பூச்சிகள் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 100 பேர் கொண்ட கும்பல் ஒரு செய்தியாளரை திடீரென சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினர். இதேபோல் மற்றொரு பெண் பத்திரிகையாளரை விரட்டிச் சென்று அவரது காரை சேதப்படுத்தினர்.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோத கும்பல் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் எனக் கூறிவிட்டு கரப்பான் பூச்சி கட்சியினர் செய்யும் அட்டூழியங்கள் பொதுமக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் காலமான நிலையில், அவர் குறித்து அவதூறாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்து மத கடவுள்களை குறிவைத்து அவமதிக்கும் செயலில் ஈடுபட்டதற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.
















