கோவை வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை, கோவை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் அர்லேகர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில், குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனும், ஆளுநர் அர்லேகரும் கலந்து கொண்டு கல்லூரியை திறந்து வைத்தனர்.
















