நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த சபரிவர்மன் என்பவர் பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு கடந்த 9ஆம் தேதி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் கடந்த 13ஆம் தேதி சபரி வர்மன் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
\உடற்கூறு ஆய்வில் 19 இடங்களில் காயம் இருப்பது தெரியவந்ததை அடுத்து சிறை அதிகாரிகள், கைதிகள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சபரி வர்மன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
















