நள்ளிரவில் ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தெஹ்ரான் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.
ஈரான் – இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் 4 மாதங்களை தாண்டி நீடித்து வருகின்றது. இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம், ஈரான் தலைநகர் தெஹ்ரான், தப்ரிஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய நகரங்களில் கடும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேற்கு மற்றும் மத்திய ஈரானில் தாக்குதல்கள் நடத்தியதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதனால், மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.
















