புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ள பழனி ரயில் நிலையத்தின் புதிய வீடியோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பழனி ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் பழனி ரயில் நிலையத்தில் இறுதிக்கட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்த மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, திறப்பு விழாவிற்கு ரயில் நிலையம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பயணிகளின் வசதிக்காக மாற்றி அமைக்கப்பட்டுள்ள நவீனப் பயணிகள் மேடைகள், நடைபாதைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள பழனி ரயில் நிலையத்தின் புதிய தோற்ற வீடியோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை உள்ளூர் மக்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
















