குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றவுடன் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் ஐஜியாக பவானீஸ்வரி ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த 29ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இறுதி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை நாளை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். நாளை மாலை 5 மணிக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கான ஏற்பாடுகள் திவிரமாக நடைபெற்று வருகின்றன.
















