5 கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் பாபா சித்திக்கை விட மோசமான நிலை சல்மான் கானுக்கு ஏற்படும் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மும்பை போக்குவரத்து போலீசாரின் வாட்ஸாப் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில், ‘லாரன்ஸ் பிஷ்னோய் உடனான நீண்ட நாள் பகையை முடித்துக் கொண்டு, சல்மான் கான் உயிர் பிழைத்திருக்க வேண்டுமானால், 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்று இருந்தது.
இல்லையென்றால், சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையை விட மோசமான செயல் அரங்கேறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் வந்த எண் குறித்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.