திருவள்ளூரில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள், விளைநிலங்களில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.