சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 120க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் க்யூ.ஆர். கோடு மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பெரிய ரயில் நிலையங்களில், ரயில் முன்பதிவு, நடைமேடை டிக்கெட், முன்பதிவு இல்லாத டிக்கெட், பார்சல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற, க்யூ.ஆர். கோடு வாயிலாக கட்டணம் செலுத்தும் வசதி, சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது பயணிகளின் வசதிக்காக 120க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.