சென்னை நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கு அமைச்சர் சேகர்பாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு பகுதிகளை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேரில் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, அகத்தீஸ்வரர் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு மாடங்கள், கோவில் சுற்றியுள்ள இடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருக்கோவிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு நிலங்களாக இருந்தது. இந்த கோவில் இடத்தில் ஒரு பள்ளி செயல்பட்டு வந்தது ஆனால் தற்போது அந்த பள்ளி செயல்படுவதில்லை என தெரிவித்தார்.
அந்தப் பள்ளி முழுவதும் மூடப்பட்டு குடோனாக இந்து சமய அறநிலைத்துறையின்ர் பயன்படுத்தி வருகின்றனர். ள்.கோவில் நிலங்களில் கட்டிடங்கள் கட்டி கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாற்று மதத்திற்கு கூட கடைகள் வாடகை விடப்பட்டுள்ளது எனறும் அவர் கூறினார்.
கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. அமைச்சர் சேகர்பாபு கூட வாரத்திற்கு இரண்டு ஆக்கிரமிப்பு இடங்களை மீட்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த கோவில் நிலத்தை மீட்பதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என அர்ஜூன் சம்பம் தெரிவித்தார்.