விழுப்புரம் மாவட்டம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர்கள் உலா வரும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
ஐப்பசி கிருத்திகை சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு இந்தக் கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து கும்ப தீபம், பஞ்சமுக தீபாராதனை ஆகியவை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோயில் உட்பிரகாரத்தில் பவனி வந்த முருகன், வள்ளி, தெய்வானையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.