மகளிருக்கான தடைக் கற்களை நீக்கினாலே அவர்களின் வாழ்க்கையில் ஏற்றம் வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருமலைச்சமுத்திரம் பகுதியில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் “விஷன் 2035” நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, 10 ஆண்டுகளுக்கு முன் 2 கோடியாக இருந்த நேரடி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை தற்போது 10 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், மோடி பிரதமரான பின் நாட்டில் லட்சக்கணக்கில் புதிய “ஸ்டார்ட் அப்” நிறுவனங்கள் உருவாகியுள்ளதாக கூறிய ஆளுநர், மகளிருக்கான தடைக் கற்களை நீக்குவதே அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்றம் பெற உதவும் எனவும் கூறினார்.