நாகையில் களிமண்ணால் அதிரசம், சமோசா, மைசூர் பாக்கு, முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களை செய்து மாதர் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்து தேவூர் கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்தில், ஏராளமான மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் ரேசன் கடையில் வழங்க வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர்.