திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மரங்களுக்கு கேக் வெட்டி நான்காம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கிராம மக்களின் உதவியோடு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்று நட்ட தேதியில் அதற்கு பிறந்த நாள் விழா நடத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில், தற்போதும் மரங்களுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.