காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்த ஒடிசாவை சேர்ந்த ராமகிருஷ்ண சாகு என்பவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே வீட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ராமகிருஷ்ணா சாகு தங்கியிருந்த வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டிலிருந்து ராமகிருஷ்ண சாகுவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.